காரை திருடி விபத்தை ஏற்படுத்தி மருத்துவ உதவியாளரை தாக்கிய போதைஆசாமி!!

 
போதை ஆசாமி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்  கிருஷ்ணா நகரில் செயல்பட்டு வருகிறது ஒரு  கால் சென்டர்.   இந்த கால் சென்டரில் பணிபுரியும் பெண்கள் பணி முடிந்ததும் 7 பேர் ஒரு காரில் திருச்செந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். கார் குமாரபுரம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிரே திருநெல்வேலி சாலையில் அரசு மதுபான கடை அருகே சிமெண்ட் விற்பனை செய்யும் கடை முன்பு நிறுத்தப்பட்ட லோடு வேனை போதை ஆசாமி திருடி சென்றுவிட்டார்.  

ஆம்புலன்ஸ்
போதை ஆசாமி ஓட்டிச் சென்ற இந்த லோடு வேன் கார் மீது மோதியது. இதில் காரில் வந்த டிரைவர் உட்பட 7 பெண்கள் மற்றும் போதை ஆசாமி அனைவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் இவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ உதவியாளர் சீதாலட்சுமியைபோதை ஆசாமி தாக்கியுள்ளார். மேலும் மருத்துவமனை வளாகத்தில் மது போதையில் கிடந்த அந்த போதை ஆசாமி பொதுமக்களிடம் தகாத வார்த்தையால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

போலீஸ்
மது போதையில் காரை திருடி சென்று விபத்தை ஏற்படுத்தி விட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியாளரை தாக்கியுள்ளார் . அத்துடன் மருத்துவமனை வளாகத்தில் அசால்டாக அமர்ந்து பொதுமக்கள் மத்தியில் கையில் குட்கா புகையிலை வைத்துக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web