தண்ணீரை தேடி ஊருக்குள் நுழைந்த யானை... குழிக்குள் விழுந்து பலியான சோகம்!

 
 யானை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. கோடை காலம் என்பதால் அந்த வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் குளங்கள், குட்டைகள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. அனைத்து யானைகளும் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராமத்திற்குள் நுழைகின்றன.

யானை

இந்த நிலையில், கடம்பூர் வனப்பகுதி குரும்பூர் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த பெண் யானை மொசல்மடுவு பகுதியில் தண்ணீர் தேடி அலைகிறது. அப்போது அப்பகுதியில் உள்ள பழனிச்சாமி என்பவரது தோட்டத்தில் உள்ள குழியில் இருந்து மேலே ஏறும் போது யானை கீழே விழுந்தது. பலத்த காயமடைந்த யானை உயிருக்கு போராடியதை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் யானையை மீட்டு சிகிச்சை அளித்தனர். யானையின் உடல்நிலையை பரிசோதித்த பின், அதற்கேற்ப உணவு மற்றும் மருந்து வழங்கப்படுகிறது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து வனத்துறையினர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்