அதிர்ச்சி வீடியோ... வீட்டு முன் காரை நிறுத்தியதற்காக தம்பதியரை கொடூரமாக தாக்கிய கும்பல்!
இந்தியாவில் ஒருபுறம் தேர்தல். மற்றொரு புறம் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. பொதுமக்கள் பாடு பெரும் திண்டாட்டமாகி வருகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒரு நபரை பலமுறை அறைந்து, தரையில் தள்ளப்பட்டு அவரது பக்கத்து வீட்டுக்காரர்களால் உதைக்கப்பட்டுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களி வைரலாகி வருகிறது . இந்த வீடியோவில் குறிப்பிட்ட நபர் தனது காரை ஒரு பொதுவான இடத்தில் நிறுத்துகிறார். இறங்கியதும் அவரது காரை அடையாளம் காட்டி தாக்குதலைத் தொடங்குகின்றனர்.
Yesterday night in Bengaluru's Doddanekundi a couple from Karnataka's Belagavi who recently moved to the city were harassed thrashed, abused for parking their car infront of their house (in a land which is open for parking).#bengaluru @CPBlr pic.twitter.com/WDQxpx3QqA
— Anagha | ಅನಘ (@AnaghaDeshpand6) March 18, 2024
அவரை எதிர்த்துப் போராட முயற்சிக்கும்போது அந்த கும்பல் தரையில் தள்ளுகிறது. நிறுத்தாமல் மீண்டும் மீண்டும் உதைத்தனர். பாதிக்கப்பட்டவரின் நண்பர் தடுக்க முயற்சிக்கும் போது அவருக்கும் உதை கிடைக்கிறது. அவரே இதனை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதில் இருக்கும் ஒரு பெண் ஒருத்தி வீடியோ எடுப்பதை கண்டதும் கையில் ஒரு செருப்புடன் அவளைத் துரத்திச் சென்று அடிக்கிறாள். இது குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை பாதிக்கப்பட்டவர்கள் - ரோகினி மற்றும் சஹிஷ்ணு என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் சில நாட்களுக்கு முன்பு தான் அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறினர்.
ரோகினியின் அலைபேசியில் படமாக்கப்பட்ட நடுங்கும் காட்சிகள், அவள் துரத்தப்படும்போது உதவிக்காக அவள் அலறுகிறாள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறித்து போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் குற்றம் புரிந்தவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!