சினிமா பாணியில் தந்தையுடன் சேர்ந்து காதலனை தீர்த்து கட்டிய காதலி!!

 
தேவிகா

சுப்ரமணியம் திரைப்படத்தில்  கிளைமேக்ஸ் காட்சியில் காதலனை கொலை செய்ய கதாநாயகியின் தந்தை திட்டம் தீட்டுவார். இது காதலிக்கு தெரிந்திருந்தும் எதுவுமே பேசாமல் இருப்பார். இதே போல்   வல்லம் பகுதியில் படுகொலை   சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தஞ்சாவூர் மாவட்டம்  திருமலைசமுத்திரம் தெற்குவீதியில் வசித்துவரும்   கர்ணனின்   இளைய மகன் சக்திவேல் . இவருக்கு வயது 23.  சக்திவேல் தனியார் பால் கம்பெனியில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவரை ஆகஸ்ட் 6ம் தேதி முதல்  காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.  இதன் அடிப்படையில் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.  அம்மாபேட்டை அருகே ராராமுத்திரைக்கோட்டை பகுதியில் புது ஆற்றில் வெட்டுக் காயங்களுடன் மிதந்த உடல்  சக்திவேலுடையது என கண்டறியப்பட்டது.  

தேவிகா

 சக்திவேலுக்கும், பாலகுருவின்  மகள் தேவிகாவுக்கும்  இடையே காதல் இருந்து வந்தது தெரிய வந்தது.  பாலகுருவை போலீஸார் விசாரணை செய்ததில்  மதுரையிலிருந்து கூலிப்படையை அழைத்து வந்து சக்திவேலை கொலை செய்ததை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.  தன் மகள் தேவிகாவை சக்திவேல் காதலித்து வந்த நிலையில்  மகளை சக்திவேலுவுக்கு திருமணம் செய்து வைப்பதில்  பாலகுருவுக்கு விருப்பம் இல்லை. இதனால் அவரை கொலை செய்ய  டீக்கடை உரிமையாளர் மூலம்  மதுரையை சேர்ந்த கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளார். தனது நிலத்தை விற்பனை செய்வது குறித்து பேச வேண்டும் என ஆகஸ்ட் 6ம் தேதி  சக்திவேலுவை    தனது தென்னந்தோப்பிற்கு வரவழைத்துள்ளார். அப்போது  அங்கு மறைந்திருந்த மதுரை  கூலிப்படையினர் 3 பேர் சேர்ந்து சக்திவேலுவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

போலீஸ்

இச்சம்பவத்திற்கு பாலகுருவின் மகன் துரைமுருகன் மற்றும் பாலகுருவின் பணியாள் கதிர்வேல் இருவரும் உடந்தை என்பதும் தெரியவந்துள்ளது. கொலை செய்த பிறகு  சக்திவேலுவையும், அவருடைய பைக்கையும்   குருவாடிப்பட்டி   புது ஆற்றில் வீசியுள்ளனர். இந்த கொலை திட்டம்  சக்திவேலுவின் காதலி  தேவிகாவிற்கும் தெரியும் என்பது தான் ஹைலைட்டே.  இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில்  சத்யா, துரைமுருகன், கதிர்வேல், தேவிகா   மதுரையை சேர்ந்த கூலிப்படையினர் என 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதில்  தேவிகாவை திருச்சி சிறையிலும், மற்ற 7 பேரையும் புதுக்கோட்டை சிறையிலும் அடைத்தனர்.  தந்தையுடன் சேர்ந்து காதலனை திட்டம் தீட்டி கூலிப்படை ஏவிய இந்த கொலை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web