கொடூரத்தின் உச்சம்.. விபச்சாரத்திற்கு சென்ற தாய்.. 10 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலம்!
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த ஜனவரி 20ஆம் தேதி டெல்லி தெருக்களில் தனியாக சுற்றித் திரிந்தார்.இதை பார்த்த சிலர் சிறுமியை பாதுகாப்புக்காக போலீசிடம் ஒப்படைத்தனர். சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தனது தாயின் காதலர் தன்னை பலாத்காரம் செய்ததாகவும், குற்றத்தை மறைக்க தொடர்ந்து சித்ரவதை செய்ததாகவும் கூறி கதறி அழுதார். பின்னர் சிறுமி குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும், உடனடியாக சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. விசாரணையின் போது சிறுமியின் வாக்குமூலம் மனதை உலுக்கியது. சிறுமி கூறியதாவது:- எனது தந்தை நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அதன் பிறகு நான் என் தாய்வழி தாத்தா பாட்டியுடன் வாழ்ந்தேன். கடந்த ஆண்டு, என் அம்மா என்னையும் என் சகோதரனையும் காஜியாபாத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு எனது தாயின் ஆண் நண்பர் என்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். எனது 13 வயது சகோதரனையும் பாலியல் வன்கொடுமை செய்தார்.
இந்தக் கொடுமையால் அண்ணன் வீட்டில் இருந்து வெளியேறினார்.எனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு எனது தாயார் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் வயதாகும்போது, என்னை தொழிலில் தள்ள விரும்பினார். அவர்களின் கொடுமை தாங்க முடியாமல் நானும் வீட்டில் இருந்து வெளியேறினேன். இவ்வாறு சிறுமி கூறினார்.
சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுமியின் தாய் மற்றும் அவரது தாயின் நண்பரை கைது செய்தனர். இதுகுறித்து காவல் உதவி ஆணையர் (லோனி) கூறியதாவது, குற்றம் சாட்டப்பட்ட ராஜுவை சிறுமி அடையாளம் காட்டினார். ஜனவரி 20ஆம் தேதி சிறுமி காணாமல் போன பிறகும், அந்தத் தாய் காணாமல் போனதாக புகார் அளிக்கவில்லை.
குற்றத்தை மறைக்க தனது தாயும் , அவரின் ஆண் நண்பர் ராஜுவும் தன்னை சித்ரவதை செய்வதாகவும், இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்பதற்காக இடுக்கி வெட்டியை வைத்து (Cutting Blade) மிரட்டுவதாகவும் சிறுமி கூறினார். முதலில், ஜனவரி மாதம் டெல்லி காவல்துறையால் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், கடந்த 9ம் தேதி லோனி எல்லைப் பகுதியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று சிறுமி கூறினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!