வேலைக்கு செல்வதை கண்டித்த கணவன்.. குழந்தையை கொன்று விட்டு இளம்பெண் தற்கொலை!
காஞ்சிபுரம் மாநகராட்சியின் செட்டிகுளம் என்.ஜி.ஓ. நகர் பகுதியில் மதன்குமார் (30) - சரண்யா (24) தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜிஷ்ணு (3) என்ற மகன் உள்ளார். மதன்குமார் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஒட்டி வருகிறார். என்ஜினீயரிங் படித்திருந்த சரண்யா நினைவுத்திறன் வளர்க்கும் பயிற்சி மையத்திற்கு வேலைக்கு சென்று வந்தார்.
ஆனால் மனைவி வேலைக்கு செல்வது மதன்குமாருக்கு பிடிக்கவில்லை. வேலைக்கு சென்றால் குழந்தையை கவனிக்க முடியாத நிலை உள்ளதாக கூறி, மதன்குமார் தனது மனைவி சரண்யாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறி வந்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் சிறு வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சரண்யா வீட்டில் யாரும் இல்லாதபோது குழந்தை ஜிஷ்ணுவை தூக்கில் தொங்கவிட்டு, பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டார். நீண்டநேரத்துக்கு பின் இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில், சிவகாஞ்சி போலீசார் அஙகு விரைந்தனர்.
தற்கொலை செய்து கொண்ட சரண்யா, குழந்தை ஜிஷ்ணுவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மதன்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரை செய்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ