தகாத உறவில் தம்பி மனைவி.. தட்டிக்கேட்ட அண்ணனை தீர்த்துக்கட்டிய பாசக்கார தம்பி!

 
கதிர்வேல் 

விழுப்புரம் காகுப்பம், பிடாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கதிர்வேல் என்பவர், வீடுகளுக்கு டைல் போடும் வேலை செய்து வந்தார். இவரது தம்பி பாரதியின் மனைவி அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்து மீண்டும் கணவர் பாரதியுடன் வந்து குடும்பம் நடத்தினார். வேறு ஒருவருடன் உறவில் ஈடுபட்ட பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்துவது ஏன் என பாரதியிடம் அண்ணன் கதிர்வேல் அடிக்கடி சண்டையிட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று குடும்ப தகராறு காரணமாக, வேலை முடிந்து வீடு திரும்பிய கதிர்வேல் தனது   தம்பி பாரதியின் மனைவி புஷ்பாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். பின்னர் வீடு திரும்பி தனது கணவரிடம் புஷ்பா நடந்த சம்பவத்தை பற்றி கூறியுள்ளார். உடனே கதிர்வேலின் வீட்டிற்கு சென்ற பாரதி, அங்கிருந்த கதிர்வேலிடம் நீ எப்படி என் மனைவியை தாக்க முடியும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பாரதி, அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து அண்ணன் என்று கூட பார்க்காமல் கதிர்வேலின் தலையில் அடித்து வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த கதிர்வேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அண்ணனை கொன்றுவிட்டு தம்பி அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்த கொலை சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்து உடலை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி அண்ணனை கொன்ற தம்பியை கைது செய்தனர். குடும்ப தகராறில் மூத்த சகோதரர் மண்வெட்டியால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web