8 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்து மூட்டை கட்டிய கொடூரம்.. இளம்பெண் வெறிச்செயல்..!!

 
அனிஷ்

8 வயது சிறுவனை இளம்பெண் கடத்தி கொலை செய்து மூட்டையில் கட்டி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி மாதர்பாக்கம் அருகே உள்ள பல்லவாடா கிராமம்த்தைச் சேர்ந்த சுரேஷ் - சிந்துமதி தம்பதி. இவர்களின்ன்  மகன் அனிஷ் (வயது 8) திடீரென மாயமானார். இதுகுறித்து பெற்றோர்கள் பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தனர். அதே சமயத்தில், பல்லவாடா கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சிறுவன் அனிஷ்  சென்றதாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கடந்த 17-ஆம் தேதி மாயமான சிறுவனை போலீசார் கண்டுபிடித்து தர வேண்டும் என கிராம மக்களும், உறவினர்களும் பாதிரிவேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

8 year old boy killed by young lady in Gummidipoondi vel

இந்த நிலையில், சிறுவனை கடத்தியதாக கூறப்படும் பல்லவாடா கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ரேகாவை (32) காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ரேகா மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று அடித்து கொலை செய்து பிணமாக மூட்டையில் கட்டி  ஆந்திரமாநிலம் புஜ்ஜி நாயுடு கண்டிகை அருகே ஒரு முள்புதரில் வீசியிருந்ததை  காவல்துறையினர் கண்டறிந்து உடலை மீட்டனர்.  பின்னர், சிறுவனின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக காளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு   அனுப்பி வைத்தனர்.

Tamil News

மேலும், சிறுவன் அனிஷை இளம்பெண் ரேகா   மற்றொரு நபருடன் சேர்த்து கடத்தி கொலை செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணைகளை போலீசார் நடத்தி வரும் நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கொலை செய்த ரேகாவிடம் பல செல்போன்கள், சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்ட நிலையில் கொலைக்கான காரணம் மற்றும் இவருடன் கொலையில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை. அதேபோல் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறி பல்லவாடா கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்களும், உறவினர்களும் மதர்பாக்கம் சத்தியவேடு நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

From around the web