கடலில் குதித்து கல்லூரி மாணவர்கள் தற்கொலை.. பெண் சடலம் மட்டும் கரை ஒதுங்கியதால் அதிர்ச்சி..!!

 
சுவக்ஷா

திருப்போரூர் அருகே சூளேரிக்காடு கடற்கரையில் அடையாளம் தெரியாத இளம்பெண் சடலம் கரை ஒதுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

செங்கல்பட்டு அடுத்த திருப்போரூர் அருகே சூளேரிக்காடு கடற்கரையில் நேற்று மாலை, 4:00 மணியளவில் இளம்பெண் சடலம் கரை ஒதுங்கியது.
தகவலறிந்து வந்த மாமல்லபுரம் போலீசார் அங்கு விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் இரண்டு பைகள், ஆண் மற்றும் பெண் இருவரின் காலணிகள், இரண்டு சைக்கிள்கள், இரண்டு கல்லூரி அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. கடற்கரை மணலில், 'எவர் 2024' என
எழுதப்பட்டது.

தமிழக கடலோர கிராமங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது: நிவாரண  முகாம்களில் மீனவ குடும்பங்கள் தங்க வைப்பு

அங்கிருந்த கல்லூரி அடையாள அட்டையில், கேளவாக்கம் தனியார் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படிக்கும் சுவக்ஷா, 19, கார்த்திக், 19, ஆகியோரின் விவரங்கள் இருந்தன.மாணவியின் உடல் மட்டும் கரை ஒதுங்கிய நிலையில், அலையில் மாணவி சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மீனவர்கள் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

மன்னாரில் கரை ஒதுங்கிய சடலம்

இதனையடுத்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகார் எதுவும் வரவில்லை என்றும், புகார் அளித்த பின்னரே இறந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

From around the web