வேலை தேடும் பெண்களுக்கு நேர்ந்த கொடுமை.. மூளைச்சலவை செய்து பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல்..!!

 
திருப்பூர் பாலியல் தொழில்

வேலை தேடி வரும் பெண்களை மூளைச்சலவை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவின் பேரில் தெற்கு காவல் ஆய்வாளர் கணேசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது கலைஞர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு இளம் பெண்களை  பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

இலங்கையில் பாலியல் தொழில் அதிகரிப்பு - ஐபிசி தமிழ்

இதனையடுத்து அங்கிருந்த விபச்சார புரோக்கரான மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஷாஜகான், மற்றும் வாடிக்கையாளர்களாகச் சென்ற இளங்கோ, உதயகுமார், முருகேசன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இவர்களை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது மேலும் பல திடுக்கிடும் சம்பவங்கள் தெரியவந்தன.வேலை தேடி திருப்பூருக்கு தனியே வந்த பெண்களை மூளைச்சலவை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

வேலை தேடும் பெண்களே உஷார்! பாலியல் தொழிலில் தள்ளும் கும்பல்..

வேலை தேடி வரும் பெண்களிடம் விபச்சார புரோக்கரான ஷாஜகான், வேலை வாங்கி தருவதாகக் கூறி பொய் வாக்குறுதி கொடுத்துள்ளார்.வேலை தொடர்பாக சந்திக்க வேண்டும் எனக்கூறி தனிமையில் வரவழைத்து பண ஆசை காட்டி மூளைச்சலவை செய்து பாலியல் தொழிலுக்குள் பெண்களை தள்ளியுள்ளார். இதில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் வடமாநில பெண்களையும் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web