பகீர்.. ஒன்றரை வயது ஆண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை.. அத்தை வெறிச்செயல்..!!

 
ஆனந்த்

ஒன்றரை வயது குழந்தையை சொந்த அத்தையே கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கொன்னியூரைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்தன். இவரது மனைவி சிந்து. இந்த தம்பதிக்கு ஆனந்த் என்ற ஒன்றரை வயதில் மகன் உள்ளார். இந்த தம்பதியின் உறவினர் பிந்து அதே பகுதியில் வசித்து வருகிறார். குழந்தை ஆனந்த்தின் அத்தை பிந்து . பிந்து சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இதற்கிடையில் கடந்த வியாழன் அன்று ஸ்ரீகாந்தன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஸ்ரீகாந்தின் மனைவி சிந்து வீட்டின் வெளியே துணி துவைத்துக் கொண்டிருந்தார். குழந்தை வீட்டில் தூங்குகிக் கொண்டிருந்தது.

இந்த வேளையில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தையை பிந்து கிணற்றில் வீசிவிட்டு சென்று விட்டார். சிறிது தூரம் சென்ற பிந்துவை அந்த பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் சிலர் வழிமறித்து விசாரித்தனர். அப்போது பிந்து, குழந்தையை கிணற்றில் வீசியதாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்கள் உடனடியாக கிணற்றுக்கு சென்று தேடினர்.

அப்போது, ​​கிணற்றில் குழந்தை ஆனந்த் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார், குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற பிந்துவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web