திடீரென மக்களை துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்.. 13 பேர் படுகாயமடைந்த சோகம்..!!

 
வெறி நாய் 

சிறுமி உட்பட 13 பேரை தெரு நாய்  துரத்தித் துரத்தி கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி  வருசநாடு பகுதியில் பொதுமக்கள் அன்றாட வேலைக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தெரு நாய் ஒன்று அவர்களை துரத்தித் துரத்தி கடிக்க ஆரம்பித்தது. இதனையடுத்து அங்கு இருந்த மக்கள் அனைவரும் தலைத்தெறிக்க ஓடினர். இதில் மோனிஷா ஸ்ரீ என்ற 7 வயது சிறுமி, ஜெயசித்ரா, ரேவதி, சுபத்ரா தேவி, ஜெயா உள்ளிட்ட நான்கு பெண்கள் உட்பட 13 பேர் காயமடைந்தனர்.

தேனி: வருசநாடு - YouTube

இதனையடுத்து 13 பேரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு முதற்கட்டமாக வருசநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தெரு நாய்கள்

படுகாயமடைந்த சிறுமி உள்ளிட்ட 10 பேர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களை கடித்த நாயை வருசநாடு ஊராட்சி நிர்வாகம் உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தெரு நாய் துரத்தி துரத்தி கடித்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

From around the web