ஆண் நண்பருடன் மது அருந்தி உல்லாசமாக இருந்த மனைவி.. ஆத்திரமடைந்த கணவன் வெறிச்செயல்..!!
ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த மனைவியை கணவர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே வடகரை கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல்(42). இவரது மனைவி சரஸ்வதி. இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். பழனிவேல் கடந்த 10 ஆண்டுகளாக குவைத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கணவர் வெளிநாட்டில் இருப்பதால் அப்பகுதியை சேர்ந்த நபருடன் சரஸ்வதிக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து கணவர் அனுப்பிய பணத்தை வைத்து மனைவி சரஸ்வதி ஆண் நண்பருடன் சேர்ந்து மது அருந்தி உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் பழனிவேல் குவைத்தில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று தம்பதி இருவரும் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பழனிவேல் கண்விழித்து பார்த்த போது படுக்கை அறையில் இருந்த மனைவியை காணவில்லை, இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் மனைவி தேடிய போது மாட்டுக் கொட்டகையில் சரஸ்வதி தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியபடி நெருக்கமாக இருந்ததை பார்த்துள்ளார்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த பழனிவேல் மனைவி சரஸ்வதியை ஓட ஓட பயங்கரமான தாக்குதல் நடத்தினார். இதனால் சரஸ்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது சரஸ்வதி உயிரிழந்து கிடப்பதை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சரஸ்வதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியை அடித்து கொலை செய்த கணவன் பழனிவேலை காவல்துறையினர் கைது செய்தனர்.