நீடிக்கும் பதற்றம் ... காஷ்மீரில் பூங்காக்கள், சுற்றுலா ஸ்தலங்கள் மூடல்!

 
காஷ்மீரில் பூங்காக்கள், சுற்றுலா ஸ்தலங்கள் மூடல்
இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக  பொதுமக்கள் பயன்பாட்டுக்கான பூங்காக்கள் மற்றும் சில சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீர் அரசின் இந்த நடவடிக்கை குறித்து அதிகாரிகள்  , 'காஷ்மீரில் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ள சுமார் 50 பூங்காக்கள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றில் சில கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக திறக்கப்பப்படவை. பாதுகாப்பு சோதனை என்பது ஒரு தொடர் நடவடிக்கை. இனிவரும் நாட்களில் இந்த மூடப்படும் பட்டியலில் மேலும் சில இடங்கள் சேர்க்கப்படலாம்.' என தெரிவித்துள்ளனர்.  
அதேபோல், சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களில், தூஷ்பத்ரி, கோகேர்நாக், துக்சும், சின்தான் டாப், அக்சாபால், பங்கஸ் பள்ளத்தாக்கு, மார்கன் டாப் மற்றும் தோஸ்மைதானம் ஆகியவை அடங்கும். தெற்கு காஷ்மீரில் உள்ள பிரபல மொகல் தோட்டங்களுக்குச் செல்வதற்கும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த மூடல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.அந்தப் பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 22ம் தேதி செவ்வாய்க்கிழமை  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்  பஹல்காமில்  பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில், சம்பவம் நடந்து ஒருவாரம் கழித்து சுற்றுலா தலங்களுக்கான அனுமதி மறுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web