தலை, கை, முதுகு, தோள்பட்டை, கால்களில் காயங்களுடன் மோட்டார் ரூமில் கிடந்த சிறுமி!! பகீர் பிண்ணனி!!

 
தனிஷ்கா

சென்னை நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (34), அம்பத்தூரில் உள்ள டாடா கம்யூனிகேஷன் அலுவலகத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது முதல் மனைவி சேலத்தைச் சேர்ந்த கீர்த்தனா (35). இவர்களுக்கு ருத்திதா என்ற மகள் உள்ள நிலையில், இத்தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக 2018ஆம் ஆண்டு பிரிந்தனர்.

பின்னர் கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த கீர்த்தனா (32) என்ற பெண்ணை ரமேஷ் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். இத்தம்பதிக்கு தனிஷ்கா என்ற பெண் குழந்தை உள்ளார். முதல் மனைவிக்கு பிறந்த மகள், இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகள் என இரண்டு குழந்தைகளுடன் சென்னை முகப்பேர் பகுதியில் வாடகை வீட்டில் ரமேஷூம் அவரது இரண்டாவது மனைவியும் வசித்து வருகிறார்கள். 

தனிஷ்கா

இந்நிலையில் சிறுமி ருத்திகா கடந்த 4 மாதமாக அடிக்கடி பொய் பேசியதாகக் கூறி அவரை ரமேஷின் இரண்டாவது மனைவி அடித்து சித்தரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியேறிய ருத்திகா, அதே பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மோட்டார் அறையில் தஞ்சமடைந்துள்ளார். 

இதைப்பார்த்த அந்த குடியிருப்பு பகுதியிலிருந்த பரீத் என்பவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், குழந்தையை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதேநேரம், மகளை காணவில்லை என ரமேஷ் புகாரளிக்க காவல் நிலையம் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரமேஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமியின் தலை, கை, தோள்பட்டை, வாய், முதுகு உள்ளிட்ட பகுதிகளில் அவருக்கு காயங்கள் இருந்ததாக கூறினார். 

தனிஷ்கா

இதையடுத்து இந்த வழக்கை மகளிர் போலீசாருக்கு மாற்றிய நிலையில், இது குறித்து தகவல் அறிந்து வந்த சென்னை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் காஞ்சனா, மணிமாலா உள்ளிட்ட அதிகாரிகள் சிறுமியிடம் விசாரித்து வருகின்றனர். சிறுமியின் இந்த நிலைக்கு சித்தியின் கொடுமைதான் காரணமா என்ற சந்தேகத்திலும் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

From around the web