மசாஜ் சென்டரில் பணிப்பெண் மிரட்டி பாலியல் பலாத்காரம்.. போலீசார் அதிரடி !!

 
மசாஜ் சென்டர்

சென்னையில் பல்வேறு இடங்களில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக புகார் உள்ளது. அதேநேரம் சில இடங்களில் அவ்வப்போது போலீசார் சோதனை நடத்தி இளம்பெண்களை மீட்கும் நடவடிக்கையும் தொடர்கிறது. இதனால் மசாஜ் சென்டர் மீதான பார்வையே மாறிப்போகும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.

ஏழை பெண்கள், வடமாநிலங்களில் இருந்து இளம்பெண்களை அழைத்துவந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கும்பலை போலீசார் கைது செய்தும் வருகின்றனர். இதேபோன்று கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலும் பாலியல் தொழில் மசாஜ் சென்டர்களில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு உள்ளது. 

மசாஜ் சென்டர்

இந்த நிலையில், பெங்களூரு ஜெயநகர் பகுதியில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டரில் 21 வயது இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அந்த மசாஜ் சென்டரின் பெண் உரிமையாளருக்கும், ரவீந்திர ஷெட்டி (42) என்பவருக்கும் இடையே நட்பு இருந்து வருகிறது. இதன்காரணமாக மசாஜ் சென்டருக்கு ரவீந்திர ஷெட்டி அடிக்கடி வந்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். 

அவ்வாறு ஒருநாள் மசாஜ் சென்டருக்குக ரவீந்திர ஷெட்டி வரும்போது, உரிமையாளர் இல்லை. மசாஜ் சென்டரில் இளம்பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனை பயன்படுத்தி ரவீந்திர ஷெட்டி இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி வெளியே கூறக்கூடாது என்றும் ரவீந்திர ஷெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் நடந்த சம்பவங்கள் பற்றி அவர் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். 

மசாஜ் சென்டர்

எனினும் ஒரு கட்டத்தில் இளம்பெண் மனஉளைச்சலில் இருந்தை அறிந்த குடும்பத்தினர் கேட்டுள்ளனர். அப்போது தனக்கு நடந்த கொடூரத்தை தனது குடும்பத்தினரிடம் இளம்பெண் கூறி அழுதுள்ளார். இதையடுத்து, ஜெயநகர் போலீஸ் நிலையத்தில் ரவீந்திர ஷெட்டி மீது இளம்பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவீந்திர ஷெட்டியை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

From around the web