கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி தற்கொலை! பரபரப்பு !

 
கொலை வழக்கில்  தேடப்பட்ட  முக்கிய குற்றவாளி  தற்கொலை! பரபரப்பு !


இந்தியாவில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்து மேற்கொண்டு வருகின்றன. இருந்த போதிலும் சில நிகழ்வுகளை தடுக்க முடியாமல் திணறி வருகின்றன.
அந்த வகையில் தற்போது ஹைதராபாத்தில் சைதாபாத் பகுதியில் சிங்கிரேனி காலனியில் 6 வயது பெண்குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டு இருந்தார்.

கொலை வழக்கில்  தேடப்பட்ட  முக்கிய குற்றவாளி  தற்கொலை! பரபரப்பு !

அதே பகுதியில் வசித்து வந்த 30 வயதான ராஜு சிப்ஸ் வாங்கி தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் , அச்சத்தையும், ஏற்படுத்தியுள்ளது.
விளையாட சென்ற மகள் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பிறகு நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் சிறுமி, ராஜு வீட்டுக்கு சென்றது உறுதி செய்யப்பட்டது.

அவனது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சிறுமியின் உடல் படுக்கையில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. விஷயம் தெரிந்ததும் ராஜு தலைமறைவாகி விட்டான். காவல்துறையினர் தனிப்படை அமைத்து அவனை தேடி வந்தனர். மேலும் ராஜு குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு உடனடியாக ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் எனவும் காவல்துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொலை வழக்கில்  தேடப்பட்ட  முக்கிய குற்றவாளி  தற்கொலை! பரபரப்பு !


இந்நிலையில், தெலுங்கான டிஜிபி காரு, சிறுமி பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி பள்ளகொண்டா ராஜு, கன்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இறந்து கிடந்ததாகத் தெரிவித்திருந்ததாக தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் செயல் தலைவர் கேடிஆர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

From around the web