உலக நாடுகள் பதற்றம்... ரஷ்யா மீது ஏவுகணை ஏவினால் அணுகுண்டுகளை வீசுவோம்... அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை!

 
புதின்
 


ரஷ்யாவின் உள் மண்டலங்கள் மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் குரூஸ் ஏவுகணைகளை உக்ரைன் வீசினால் அணுகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் முடிவை ரஷ்யா பரிசீலிக்கும் என்று அந்நாட்டு அதிபர் புதின் உக்ரைனை எச்சரித்துள்ளது உலக நாடுகளை பதற்றமடைய செய்துள்ளது.

பல வருடங்களாகவே மூன்றாம் உலகப் போர் மூள்வதை உலக நாடுகள் தவிர்த்து வருகின்றன. ஒவ்வொரு முறையும் அமெரிக்கா போர் பிரச்சனைகளில் தலையிடும் போதெல்லாம் அது 3வது உலகப் போராக உருவெடுக்க கூடாது என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் சமரச முயற்சியில் ஈடுபடுவது வழக்கத்தில் இருந்து வருகிற்து. 

புதின்

இந்நிலையில், கடந்த இரண்டரை வருட காலத்திற்கும் மேலாக ரஷ்யா -உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் சூழலில், ரஷ்யாவின் உள் நகரங்கள் மீது தாக்குதல் நடத்த உக்ரைன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில், ரஷ்யாவின் உள் நகரங்கள் மீது ஏவுகணைகளை ஏவினால், அணுகுண்டு பயன்படுத்த ரஷ்யா தயங்காது என்று ரஷ்ய அதிபர் புதின் பேசியிருப்பது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

நேட்டோ கூட்டமைப்பில் சேர முயன்ற உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதும், உக்ரைனை அமெரிக்கா தொடர்ந்து ஆதரித்து வருவதும் இன்னொரு போர் மூளும் அபாயத்தை அதிகரிக்கவே செய்கின்றன. 

இந்நிலையில், தங்கள் நாட்டில் தயாரான குரூஸ் ஏவுகணைகளை ரஷ்ய நகரங்களின் மீது வீசுவதற்கு உக்ரைனுக்கு இங்கிலாந்து அனுமதி அளிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. 

ரஷ்ய அதிபர் புதின்

அதிக சக்திவாய்ந்த இந்த ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக 2 வாரங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் வாஷிங்டனில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆலோசனை நடத்தினார் என்று ரஷ்யா குற்றம்சாட்டியிருக்கிறது. 

இந்நிலையில், பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய ரஷ்ய அதிபர் புதின், தங்கள் நாட்டு அணு கொள்கையில் மாற்றம் செய்வதாக அதிரடியாக அறிவித்து பரபரப்பைப் பற்ற வைத்திருக்கிறார். ரஷ்ய நகரங்கள் மீது குரூஸ் ஏவுகணைகள், போர் விமானங்கள் மற்றும் டிரோன் தாக்குதல் நடத்த உக்ரைன் தயாராகிறது என்ற உறுதியான தகவல்கள் கிடைத்தால் ரஷ்யா உக்ரைன் மீது அணு குண்டு வீசுவதை பரிசளிக்கும் என்று புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.