அடுத்த அதிர்ச்சி... அருணாச்சலப் பிரதேசம் குருங் குமே பகுதியில் நிலநடுக்கம்!

 
நிலநடுக்கம்

அருணாச்சலப் பிரதேசத்தில் பதிவான லேசான நிலநடுக்கம் குறித்த விபரங்கள் தேசிய நில அதிர்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

அருணாச்சலப் பிரதேசத்தின் குருங் குமே பகுதியில் நேற்று மாலை 5.37 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 2.9 ஆகப் பதிவானதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் மியான்மர்

இட்டாநகருக்கு வடக்கே சுமார் 120 கி.மீ. தொலைவில், பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது. இதன் அட்ச மற்றும் தீர்க்கரேகைகள் முறையே 28.158° வடக்கு மற்றும் 93.421° கிழக்கு எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறைந்த ரிக்டர் அளவிலான லேசான அதிர்வு என்பதால், இதன் காரணமாக உயிர் சேதமோ அல்லது பொருட் சேதமோ ஏற்பட்டதாக உடனடியாக எந்தவிதத் தகவலும் வெளியாகவில்லை.