சிவகங்கையில் அடுத்த அதிர்ச்சி... பள்ளி மாணவி ஊருணியில் சடலமாக மீட்பு!

 
மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள மேலப்பூங்குடி கிராமத்தில் ஏழைத் தொழிலாளியான ராஜராஜசோழன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 12 வயதுடைய மகள் அபிநயா, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், சிறுமி அபிநயா காடந்தேத்தி கிராமப்புறப் பகுதிகளில் தனது குடும்பத்தினருக்கு உதவியாக வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

தற்கொலை

இந்நிலையில், நேற்று முன்தினம் மதிய வேளையில் சிறுமி அபிநயா தனது தாயாருடன் சேர்ந்து தங்களது வளர்ப்பு ஆடுகளை மேய்ப்பதற்காகப் புல்வெளிகள் நிறைந்த காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். ஆடுகள் காட்டில் மேய்ந்து கொண்டிருந்த போது, தற்காலிகமாக அவற்றை மட்டும் கவனித்துக் கொள்ளுமாறு மகளிடம் கூறிவிட்டு, அவளது தாயார் சில அவசர வேலைகளுக்காக வீட்டிற்குத் திரும்பியுள்ளார். காட்டில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுமி, நீண்ட நேரமாகியும் மாலை வரையில் வீட்டிற்குத் திரும்பவில்லை.

அழுகிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம்- கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

இதனால் பதற்றமடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் காட்டுப் பகுதிக்குச் சென்று தேடிய போது, அங்குள்ள ஒரு பொது ஊருணியில் அபிநயா எதிர்பாராத விதமாகப் பிணமாக மிதப்பது தெரியவந்தது. ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த போது தாகம் எடுத்துத் தண்ணீர் குடிக்கவோ அல்லது கை, கால்களைக் கழுவவோ ஊருணிக்குச் சென்ற போது கால் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி அவர் உயிர் இழந்திருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த மதகுபட்டி போலிஸார், சிறுமியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.