பகீர்... கதறித் துடித்த சிறுவன்... காயத்திற்கு மருந்து போடாமல் பெவி குயிக் தடவிய நர்ஸ்... !
கர்நாடகா மாநிலத்தில் ஹவேரி அருகே அடூர் பகுதியில் அரசு மருத்துவமனையில் கன்னத்தில் காயங்களுடன் ஒரு சிறுவன் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டான். அந்த சிறுவனுக்கு அங்கிருந்த நர்ஸ் ஒருவர் காயத்திற்கு மருந்து போடுவதற்கு பதிலாக பெவி குயிக் ஒட்டியுள்ளார்.

இச்சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போட்டோ கூட சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நர்ஸ் “ காயத்திற்கு மருந்து போட்டால் தழும்பு ஏற்படும் என்பதால் பெவி குயிக் வைத்து ஒட்டியதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் அந்த நர்ஸ் ஜோதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
