காஷ்மீரில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்கு மிக கடுமையான தண்டணை தர வேண்டும்... ரஜினிகாந்த் ஆவேசம்!

இந்தியாவில் ஏப்ரல் 22ம் தேதி செவ்வாய்க்கிழமை காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு உள்ளூர் முதல் உலக நாட்டு தலைவர்கள் வரை பலரும் தங்கள் கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள் காஷ்மீர் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது அவர், காஷ்மீர் சம்பவம் கண்டிக்கத்தக்கது என தனது கடும் அதிருப்தியை பதிவு செய்தார்
இது குறித்து மேலும் அவர் ” காஷ்மீரில் நிலவும் அமைதியை சீர்குலைக்க சிலர் சதி செய்து வருகின்றனர். இதனை செய்தவர்களையும், அதற்கு பின்னால் இருப்பவர்களையும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடித்து மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அவர்கள் கனவில் கூட நினைக்காத தண்டனையை கொடுக்க வேண்டும். சீக்கிரம் இதனை செய்ய வேண்டும். மத்திய அரசு இதனை செய்வார்கள் என நம்பிக்கை இருக்கிறது. ” என ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!