வரலாற்றில் உச்சம்... ரூ.50,000 யை நெருங்குகிறது தங்கம் விலை! பொதுமக்கள் அதிர்ச்சி!
வரலாற்றில் உச்சமாக ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,000யை நெருங்குகிறது. இன்றைய காலை நேர வர்த்தக நிலவரப்படி ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.49,000யைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக பொது மக்களிடையே பெரும் கலக்கம் நிலவி வருகிறது. குறிப்பாக கடந்த ஐந்தாம் தேதி துவங்கி தற்போது வரை ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தில் இருந்து வருகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் கடந்த 5ம் தேதி 85 ரூபாயும், 6ம் தேதி 25 ரூபாயும், 7ம் தேதி 50 ரூபாயும், 8ம் தேதி 15 ரூபாயும் உயர்ந்திருந்தது. நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 48 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை 5வது நாளாக உயர்வை சந்தித்துள்ளது. இன்று காலை வர்த்தக நேரம் துவங்கிய போது ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 45 உயர்ந்தது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,150 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சமாக 49,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெள்ளியின் விலையும் இன்று கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ரூ.79.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.79,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.