கேஸ் கட்டர் மூலம் ஏ.டி.எம் உடைப்பு.. மூட்டை மூட்டையாக பணத்தை தூக்கிச் சென்ற மர்ம நபர்கள்..!!
கேஸ் கட்டரை பயன்படுத்தி ஏ.டி.எம்மில் கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கேஸ் கட்டர் மூலம் டேராடூன் ஏடிஎம் கொள்ளை. ஐந்து பேர் கொண்ட கும்பல் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பல லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றது. ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள தண்டேரா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பணத்துடன் கொள்ளை கும்பல் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. ஏடிஎம்மில் எவ்வளவு பணம் இருந்தது என்பது சரியாக தெரியவில்லை. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ஹரித்வார் கிராமப்புற காவல் கண்காணிப்பாளர் ஸ்வபன் கிஷோர் தெரிவித்துள்ளார்.
முகமூடி மற்றும் சால்வை அணிந்து கொண்டு கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. இயந்திரத்தின் வெட்டப்பட்ட பகுதியுடன் வாகனத்தில் மூன்று திருடர்கள் ஓடுவதை காட்சிகள் காட்டுகிறது. இடையில் ஒருவரின் சால்வை தரையில் விழுகிறது. பின்னால் வரும் இன்னொருவர் இந்த சால்வையை எடுத்து கொடுப்பதைக் காணலாம்.