”வாங்க சார் டிராப் பண்றேன்”.. ஆசிரியரை அழைத்துச் சென்ற ஆபாச படம் எடுத்த மர்ம கும்பல்..!!

 
குமரேசன்

ஆசிரியரை ஆபாச படம் எடுத்து மிரட்டிய நபர்கள் காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ராயர்பாளையம் மெஜஸ்டிக் சர்க்கிள் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 45). இவர் சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.  இந்நிலையில் கடந்த 2ம் தேதி சனிக்கிழமை சேலம் மேட்டூரில் இருந்து வேலை முடிந்து விடுமுறை தினம் என்பதால் ஊருக்கு திரும்பி உள்ளார். அன்றைக்கு திருப்பூர் பழைய பேருந்து நிலையம் வந்து இறங்கிய அவர் பல்லடம் செல்வதற்கு பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்க ஆசிரியர் குமரேசன், தான் பல்லடம் ராயர்பாளையம் செல்ல வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு அந்த ஆசாமியும் தானும் பல்லடம் அருள்புரம் வரை செல்ல இருப்பதாகவும் உடன் வந்தால் பைக்கில் கொண்டு சென்று விடுவதாகவும் கூறியதனை தொடர்ந்து ஆசிரியர் குமரேசன் அவனுடன் பைக்கின் பின்புறமாக அமர்ந்து கொண்டு பல்லடம் நோக்கி சென்றுள்ளார்.

இருசக்கர வாகனம் பல்லடம் திருப்பூர் சாலை அருள்புரம் அருகே சென்ற போது பைக்கை ஓட்டிச் சென்ற மர்ம நபர் தனது நண்பர்களுடன் அவசரமாக பேச வேண்டி இருப்பதாகவும் 2 நிமிடத்தில் சென்றுவிடலாம் என்று கூறி வாகனத்தை ஆள் நடமாட்டமற்ற இருள் சூழ்ந்த பகுதியில் நிறுத்தியுள்ளான். பின்னர் சற்று நேரத்தில் அங்கு வந்த மேலும் இரண்டு பேருடன் சேர்ந்து கொண்டு ஆசிரியர் குமரேசனை கத்தியை காட்டி மிரட்டி அவரது ஆடைகளை களைத்து நிர்வாணப்படுத்தி தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர். 

3 persons arrested who sexually abuse private school teacher in tirupur district vel

மேலும் அந்த புகைப்படங்களை ஆபாச வலைத்தளத்தில் பதிவேற்றி விடுவதாகவும் உடனே தங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் தனது செல்போன் மூலம் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 50 ஆயிரத்தை மிரட்டிய கும்பலைச் சேர்ந்த ஒருவன் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து அந்த கும்பல் அவரை விடுவித்துள்ளது. இதனையடுத்து உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய ஆசிரியர் குமரேசன் தனக்கு நடந்த சம்பவம் குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார்  அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பல்லடத்தைச் சேர்ந்த வீரமணி, அர்ஜுன், ஜெகன் ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ 30 ஆயிரம் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர். 

From around the web