சாலையில் நடந்து சென்ற பெண் பத்திரிக்கையாளருக்கு பாலியல் தொல்லை.. கொடூர இளைஞர் கைது!

 
தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

வடபழனி பகுதியை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் பிரபல நாளிதழில் பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது தங்கையுடன் வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, ​​இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பாலியல் தொல்லை

அதிர்ச்சியடைந்த பத்திரிகையாளர் கூச்சலிட்டதால், அந்த நபர் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பியோடினார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அந்த இளைஞரின் இருசக்கர வாகன பதிவு எண் குறித்து விசாரித்தனர்.

கைது

கோடம்பாக்கம் சிஆர்பி கார்டன் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (21) என்பவர் பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விக்னேஷ் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web