திமுக நிர்வாகி சரமாரியாக வெட்டி படுகொலை.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை!

 
கார்த்திக்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள பேரிகை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (38). இவர் சூளகிரி வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி பேரணி அமைப்பாளராக இருந்தார். காய்கறி மொத்த விற்பனை, ரியல் எஸ்டேட் வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கார்த்திக்கின் உறவினர் ஒருவருக்கும், கர்நாடக மாநிலம் அனிகிரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த  ஒருவருக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கார்த்திக் அடிக்கடி அனிகிரிப்பள்ளிக்கு சென்று இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நிலம் தொடர்பான வழக்கில் கார்த்திக்கின் உறவினருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது. கார்த்திக் அணிகிரிப்பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பேரிகையை அடுத்த சூலகுண்டா என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த கார்த்திக்கை 3 பேர் வழிமறித்து வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். உயிருக்கு போராடிய கார்த்தியை அப்பகுதியினர் மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தி.மு.க., பிரமுகர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் ஓசூர் எம்.எல்.ஏ பிரகாஷ், ஓசூர் மேயர் உள்ளிட்டோர் மருத்துவமனையில் குவிந்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை வழக்கை போலீசார் விசாரித்தபோது, அனிகிரிப்பள்ளி பகுதியை சேர்ந்த நாராயணப்பா மகன் பிரதாப் (30) உள்பட 3 பேர் நிலத்தகராறு  முன்விரோதம் காரணமாக கார்த்திக்கை வெட்டிக் கொன்றது தெரியவந்தது. தலைமறைவான 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இறந்த கார்த்திக்கு ரம்யா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web