பெரும் பரபரப்பு.. நடுரோட்டில் கிடந்த மனித தலை.. தலை தெறிக்க ஓடிய பொதுமக்கள்..!!

 
நடுரோட்டில் மனித தலை

நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் மனித தலை இருந்ததைக் கண்ட பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்திலிருந்து பேளூர் செல்லும் சாலையில் குள்ளம்பட்டி என்ற பகுதியில் சாலையின் நடுவே ரத்த வெள்ளத்தில் மனிதத் தலை கிடந்தது. இதையடுத்து அங்கு வந்த அப்பகு மக்கள்  பெரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மனிதத் தலையை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியில் வேறு ஏதேனும் உடல் பாகங்கள் உள்ளதா என்றும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

போலீஸ் விசாரணை

அப்போது, சம்பவ இடத்திற்கு அருகே உள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அந்த நபர் ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளி என்பதும், அவர் காட்டூர் பகுதியைச் சேர்ந்த திருமலை என்பதும் தெரியவந்தது. சில நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து ஜாமீனில் வந்த அவர், இந்த கொலையைச் செய்துள்ளார் என்பதும் விசாரணையில் வெளியே வந்துள்ளது.

சேலத்தில் விசாரணை நடத்தும் போலீஸ்

இதனையடுத்து, திருமலை கொலை செய்த நபர் யார், எதற்காக இந்த கொலை நடந்தது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த நபரின் உடல் பேளூர் சாலையில் உள்ள அக்ரஹாரம் ஏரியில் உள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

From around the web