நாளை +2 துணைத் தேர்வு முடிவுகள் வெளியாகிறது... எப்படி தெரிந்து கொள்வது?

 
தேர்வு

நாளை ஜூலை 24ம் தேதி தமிழகத்தில் நடைப்பெற்ற 12ம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகின்றது. கடந்த மே மாதம் 8ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்  வெளியான நிலையில், பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மீண்டும் தேர்ச்சியடைந்து கல்லூரிகளில் சேர்வதற்கு ஒரு வாய்ப்பாக துணைத் தேர்வு உடனடியாக நடத்தப்பட்டது. இந்த துணைத் தேர்வுகளின் முடிவுகள் நாளை வெளியாகிறது. இதில் தேர்ச்சியடைபவர்கள் இந்த வருடமே கல்லூரிகளில் சேரலாம். 

 தேர்வு

பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகள் ஒரு வருட காலத்தை வீணாக்காமல் இருப்பதற்காக கடந்த ஜூன் 19ம் தேதி துணைத் தேர்வு நடத்தப்பட்டது.  12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத 47,934 பேரும் விண்ணப்பித்து துணைத்தேர்வில் கலந்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.  

 தேர்வு முடிவுகள்

இந்நிலையில் நாளை ஜூலை 24ம் தேதி 12ம் வகுப்பு துணை தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு முடிவுகளை dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ  இணையதளத்தின் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web