கல்லூரி மொட்டை மாடியில் உல்லாசமாக இருந்த மாணவன், மாணவி!! வீடியோ வெளியானதால் தற்கொலை!!

 
மொட்டை மாடி

கர்நாடக மாநிலம் தாவணகரே மாவட்டத்தில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது.   இந்த கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவனுக்கும், மாணவிக்கும் காதல்  ஏற்பட்டுள்ளது. இவர்கள்  இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்துள்ளனர். விடுமுறை தினங்களில் மொபைல் போனில் பேசியும் நேரில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்தனர்.  
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மாணவனும், மாணவியும் கல்லூரியில் உள்ள மொட்டை மாடிக்கு சென்றுள்ளனர். அங்கு யாருக்கும் தெரியாமல் இருவரும் நெருக்கமாகி உல்லாசமாக இருந்துள்ளனர். இதற்கிடையே தான் மாணவனும், மாணவியும் உல்லாசமாக இருக்கும் வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியானது.

தற்கொலை


அதாவது மாணவனும், மாணவியும் கல்லூரி மாடியில் சேர்ந்து இருந்ததை அருகே உள்ள கட்டடத்தில் இருந்தவர்கள் யாரோ மொபைல்  வீடியோ எடுத்து இருப்பதும், அந்த வீடியோ தான் வலைதளங்களில் பரவி வருவதும் தெரியவந்தது. இதனை கல்லூரியில் உள்ள பிற மாணவ - மாணவிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.இதனால் குறிப்பிட்ட அந்த மாணவனும், மாணவியும் மனம் உடைந்து போயினர். இதற்கிடையே அவமானத்தில் அந்த மாணவி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதனை அறிந்த் மாணவனும் தற்கொலை செய்தார். இருவரின் குடும்பத்தினரும் கதறி அழுதனர்.

போலீஸ்

மேலும் மாணவனும், மாணவியும் சேர்ந்து இருந்த வீடியோ வெளியானதால் தான் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதை  தெரிந்து கொண்டனர்.இதையடுத்து குடும்பத்தினர் சார்பில் தனித்தனியாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து வீடியோ எடுத்தது யார்?, சமூக வலைதளங்களில் பதிவிட்டது யார்? என்பது குறித்து  தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தாவணகரேயில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web