தொடரும் சோகம்... கனடாவில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாணவி!

அவரது தொலைபேசி இரவு 11:40 மணிக்கு அணைக்கப்பட்டதோடு, மறுநாள் நடைபெறவிருந்த முக்கியமான தேர்வையும் தவற விட்டார். அவருடைய குடும்பத்தினரும், நண்பர்களும் தீவிரமாக தேடியும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. தற்போது உள்ளூர் போலீசார் மரணத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வான்ஷிகாவின் மரணம் கனடாவில் இந்திய சமூகத்தை பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், 21 வயதான இந்திய மாணவி ஹர்சிம்ரத் ரந்தாவா, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் தவறுதலாக உயிரிழந்தார். அதேபோல், ஒட்டாவா அருகே ராக்லேண்ட் பகுதியில் மற்றொரு இந்தியர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது. இந்த வகைத் தாக்குதல்கள் கனடாவில் இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு பிரச்சனைகளை முன்னிறுத்தியுள்ளது.
வான்ஷிகாவின் மரண விவகாரம் குறித்து அதிகாரிகளிடம் எடுத்துச் செல்லப்பட்டு இருப்பதாக இந்திய தூதரகம் மரணத்திற்கான காரணம் குறித்து உள்ளூர் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வான்ஷிகாவின் குடும்பத்தினரும், இந்திய சமூகமும் நியாயத்திற்காக குரல் கொடுத்து வருகின்றனர். இந்திய தூதரகம் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!