கபடி போட்டிக்கு சென்று வீடு திரும்பிய போது நேர்ந்த சோகம்.. கோர விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

 
 கவின் - ஜஸ்வந்த்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த கவின் (17), ஜஸ்வந்த் (20), காளிதாஸ் (24) ஆகியோர் சீர்காழியிலிருந்து திருமுல்லைவாசலுக்கு இருசக்கர வாகனத்தில் வந்தனர். அப்போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

இதில் கவின் (17), ஜஸ்வந்த் (20) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த காளிதாஸ் (24) சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், சின்னங்குடியில் நடந்த கபடி போட்டிக்கு சென்ற 3 பேரும் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web