தறிகெட்டு ஓடிய வாகனம்... மரத்தில் மோதி கோர விபத்து.. தந்தை-மகன் உள்பட 3 பேர் உயிரிழப்பு!

 
வேன் ஜீப் விபத்து மரத்தில் வேன் ஜீப் விபத்து மரத்தில்

மத்தியப் பிரதேச மாநிலம் பிண்ட் மாவட்டத்தில், பக்தர்கள் பயணம் செய்த வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதிய கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். குவாலியரில் இருந்து கோவிலுக்குச் சென்று விட்டு அதிகாலை சுமார் 5.30 மணியளவில் திரும்பிக் கொண்டிருந்த போது, மௌ-மெஹ்கான் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. தன்ட்ரௌவா அனுமன் கோயில் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மரம் மீது பயங்கரமாக மோதியது.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

இந்த விபத்தில் குவாலியரைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்தவுடன் அருகில் இருந்தவர்கள் மற்றும் காவல்துறையினர் உடனடியாகக் காயமடைந்த 3 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாகனத்தில் பயணித்த ஒரு பெண்ணும், ஒரு குழந்தையும் எவ்விதக் காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது சற்று ஆறுதலாக உள்ளது.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.