வைரலாகும் வீடியோ... ரஜினியின் பக்கத்து வீட்டு பெண்மணி ஆவேசம்... தொல்லைத் தர்றது ரஜினிக்கு சரியா?!

 
ரஜினி

பிறந்தநாள், தீபாவளி, புது வருஷம், பொங்கல் என விசேஷ நாட்களில் இப்படி ரசிகர்கள் கூட்டத்தினால் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு எல்லாம் தொந்தரவு ஏற்படுகிறது. இப்படி ரசிகர்களை தனது கல்யாண மண்டபத்தினுள்ளோ அல்லது வேறேதேனும் தனிப்பட்ட இடத்தில் சந்திக்காமல் சுற்றிலும் இருக்கும் வீட்டாரை எல்லாம் தொந்தரவு செய்வது ரஜினிக்கு சரியா? என்று போயஸ் கார்டனில் ரஜினியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்மணி இன்று செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்தால் தங்களுக்குத் தொல்லை ஏற்படுகிறது என  ஆவேசமாக பேசி உள்ளார். இந்த காணொளி இப்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் இன்று பொங்கல் பண்டிகையை ஒட்டி போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் அங்கு கூடி இருந்த ரசிகர்களுக்கு வெளியே வந்து பொங்கல் வாழ்த்துக்களை கூறினார். 'வாழ்க்கையில் ஒழுக்கம், நம் சிந்தனையில் நேர்மை இருந்தால் என்றென்றும் மகிழ்ச்சி பொங்கும்' என நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்துக்களை கூறிவிட்டு, வீட்டின் முன்பு கூடி இருந்த ரசிகர்களுக்கு கையசைத்து தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். பொங்கல் மட்டுமல்ல புது வருடம், தீபாவளி, ரஜினிகாந்தின் பிறந்தநாள் என இது போன்ற விசேஷ தினங்களில் போயஸ் கார்டன் முன்பு ரசிகர்கள் குவிவது வழக்கம். அங்கு போலீஸ் பாதுகாப்பும் அந்த சமயத்தில் இருக்கும்.

இது ஒவ்வொரு வருடமும் வழக்கமாக நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் தான் இன்று நடிகர் ரஜினிகாந்தின் பக்கத்து வீட்டு பெண்மணி ரஜினிகாந்த்தால் தொந்தரவு என செய்தியாளர்களிட்ம சண்டை போட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி உள்ளது. அதில் அவர் பேசியிருப்பதாவது, "உங்கள் தலைவர் வீட்டு கேட்டைத் திறந்து ரசிகர்களை உள்ளே விடுங்கள். ஏன் எங்கள் வீட்டின் முன்பு தொந்தரவு செய்கிறீர்கள்? நாங்களும் தான் டேக்ஸ் கட்டுறோம். இதே ஏரியாவில் காலங்காலமாக குடியிருக்கோம். எங்களுக்கெல்லாம் எந்த ஸ்பெஷலும் கிடையாது. இங்களுக்கு மட்டும் என்ன இருக்கு? ஒவ்வொரு முறையும் இப்படி ரசிகர்கள் இங்க வருவது எங்களுக்கு தொல்லையா இருக்கு. இதுக்கு ஒரு முடிவே கிடையாதா?" என அங்கிருந்த செய்தியாளர்களை பார்த்து ஆவேசம் ஆகியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

From around the web