பகீர் வீடியோ... பாகிஸ்தான் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை... சிந்து நதியில் தண்ணீர் ஓடலன்னா இந்தியர்களின் ரத்தம் ஓடும்!

 
. பாகிஸ்தான் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ பொறுப்பேற்றுக் கொண்டது.  

இதனையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, பாகிஸ்தானுக்கு எதிராக கடும் பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி  அட்டாரி-வாகா எல்லை மூடல், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தல், தூதரக அதிகாரிகளை வெளியேற்றுதல் என அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  


இந்நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவரும், முன்னாள் அமைச்சர்  பிலாவல் பூட்டோ ஜாதாரி கடும் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  “சிந்து நதி என்பது பாகிஸ்தானுக்கே சொந்தமானது. நதி வழியாக நமது தண்ணீர் ஓட வேண்டும், இல்லையென்றால் இந்தியர்களின் ரத்தம் ஓடும்,” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   பஹல்காம் தாக்குதலை மக்கள் கவனத்தை திசைதிருப்புவதற்காக இந்தியா பாகிஸ்தானை குறி வைக்கிறது” என  விமர்சனம் செய்துள்ளார்.  பாகிஸ்தான் அரசும் தனது பதிலடியாக இந்தியா உடனான அனைத்து வணிக நடவடிக்கைகளை நிறுத்தி, இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடிவிட்டது.  
இந்தியாவின் எந்தவொரு நடவடிக்கையும், சிந்து நதிநீரை தடுக்கும் முயற்சியாக இருந்தால், அதை “போர் நடவடிக்கை” என்று கருதி பதிலடி எடுக்கப்படும் என பாகிஸ்தான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான நிலைமை தற்போது  பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web