பகீர் வீடியோ... கோர ரயில் விபத்து... பலி எண்ணிக்கை 30ஆக உயர்வு... 150க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
மக்களின் விருப்ப பயணமாக உலகம் முழுவதுமே ரயில் பயணம் அமைந்திருக்கிறது. பாதுகாப்பான பயணம் என்கிற விதத்திலும் முதல் தேர்வாக ரயில் பயணம் அமைந்திருக்கிற நிலையில், அடிக்கடி ரயில் விபத்துக்கள் ஏற்பட்டு மனதைக் குலைக்கின்றன. பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து 275 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராவல்பிண்டிக்கு சென்றுக் கொண்டிருந்த ஹசாரா எக்ஸ்பிரஸின் 10 ரயில் பெட்டிகள் விபத்தில் திடீரென தடம் புரண்டன.
பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து அபோதாபாத் வரை ஹஸாரா எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. இந்த விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். தடம்புரண்ட 10 பெட்டிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைப்பெற்றது.
Pakistan🚨 At least 20 people were killed and over 150 injured when 10 bogies of the Rawalpindi-bound Hazara Express derailed near Sahara railway station between Shahzadpur and Nawabshah. #nawabshah #sindh #karachi #Pakistan pic.twitter.com/1u3y7ruGoM
— mubashir khawaja (@khmaarkhoor) August 6, 2023
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.படுகாயம் அடைந்த பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில் பெட்டிகள் தடம் புரண்டதற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்த விபத்து காரணமாக, அப்பாதையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ரயில்வே கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 2021ல் சிந்து மாகாணத்தில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானில் ரயில்வே துறையை மேம்படுத்த அரசாங்கங்கள் முயன்று வருகின்றன. ஆனால் நிதிப் பற்றாக்குறை காரணமாக அது நிறைவேறாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?