குற்றவாளி வீட்டை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்!! பற்றி எரியும் மணிப்பூர்!!

 
மணிப்பூர்

மணிப்பூரில்  இரு சமூகத்தினரிடையே உருவான மோதல்  பெரும் கலவரமாக வெடித்துள்ளது.அங்கு சமூக வலைதளங்கள் முடக்கப்பட்ட நிலையில் நடக்கும் சம்பவங்கள் வெளியுலகிற்கு தெரியாமல் கொடூரங்கள் நடைபெற்று வருகின்றன.கொடூரத்தின் உச்சமாக சூகி பழங்குடியினத்தை சேர்ந்த இரு பெண்களை மற்றொரு சமூகத்தை சேர்ந்த ஆண்கள் நிர்வணமாக்கி, அந்தரங்க உறுப்புகளில் கைவைத்து இழுத்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலானது.

மணிப்பூர்

அந்த பெண்கள் மர்மநபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  அந்த வீடியோவில் இரு பெண்களும் கதறி அழுகின்றனர்.  இந்த காட்சிகள், கொடூரங்கள் இந்தியா முழுவதும் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஹேராதாஸ் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.  

மணிப்பூர்


இந்நிலையில், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி ஹேராதாஸ் வீட்டை கிராம மக்களே அடித்து நொறுக்கியுள்ளனர்.  ஹேராதாசின் செயல் ஒட்டுமொத்த மெய்தி இன மக்களுக்கே அவமானத்தை தேடி தந்ததாக கூறி, அவரது வீட்டை மெய்தி பெண்கள் அடித்து நொறுக்கியதுடன், தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.  இச்செயல் அங்கு வசிக்கும் பெண்கள் எந்த அளவுக்கு கொந்தளிப்பில் உள்ளனர் என்பதை காட்டுகிறது. அரசு விரைவில் நடவடிக்கை எடுத்து அம்மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஒட்டு மொத்த இந்திய மக்களும் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web