சாவிலும் இணைபிரியா ஆதர்ச தம்பதி... கணவன் இறந்ததை கேட்டதும் உயிரை விட்ட மனைவி!

 
குப்பாயி

 அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்  வடவீக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் மூக்கன் . 78 வயதாகும் இவரது மனைவி 70 வயது குப்பாயி . ஆதர்ச தம்பதிகளாக மனமொத்து வாழ்ந்து வந்த இந்த  தம்பதிக்கு 4 மகன்கள்  . அனைவருமே  திருமணமாகி தங்களது குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.  முத்தையனும், குப்பாயியும் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.  

குப்பாயி
வயது மூப்பு காரணமாக இருவருமே அடிக்கடி நோய்வாய்ப்பட்டு வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாகவும், குப்பாயிக்கு சரியாக காது கேட்காது  எனவும் கூறப்படுகிறது.  முத்தையன்  உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதுகுறித்து குப்பாயிக்கு கூறியும் காதில் எதுவும் விழவே இல்லை.  முத்தையன் இறந்ததை அறிந்த உறவினர்கள், அவரது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது மேளம் அடித்ததையும், உறவினர்கள் அழுது கொண்டிருந்ததையும் பார்த்து சந்தேகமடைந்த குப்பாயி அருகில் இருந்தவர்களிடம் விவரம் கேட்டார். அப்போது முத்தையன் இறந்தது குறித்து அவரிடம் கூறியுள்ளனர். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குப்பாயி, கணவர் இறந்த துக்கம் தாங்க முடியாமல் மார்பில் அடித்துக் கொண்டு கதறி அழுதார்.

rip
அப்போது முத்தையன் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகில் குப்பாயி திடீரென மயங்கி விழுந்தார். உறவினர்கள் அருகில் சென்று பார்த்தபோது குப்பாயியும் உயிரிழந்தது தெரியவந்தது.அவர்களது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து அவர்களின் உடல்கள் அருகருகே அடக்கம் செய்யப்பட்டது. வாழும்போது ஒற்றுமையாக வாழ்ந்த தம்பதி சாவிலும் இணைபிரியாத சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web