சிங்கத்தை சீண்டிப் பார்த்த வாலிபர்.?! நடந்தது என்ன? பதற வைக்கும் வீடியோ பதிவு!!

 
சிங்கத்தை சீண்டிப் பார்த்த வாலிபர்.?! நடந்தது என்ன? பதற வைக்கும் வீடியோ பதிவு!!

தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ளது ஐதராபாத்தில் நேரு உயிரியல் பூங்கா. இங்கு கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடித்து மிருகங்களை சுற்றிப்பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த உயிரியல் பூங்காவிற்கு சாய்குமார் என்ற 31 வயது இளைஞன் வந்திருந்தான்.


இச்சம்பவம் உயிரியல் பூங்காவில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் அவர் ஒரு பாறை மீது ஏறி நின்று சிங்கத்தை சீண்டுகிறார். பார்வையாளர்கள் அவரை வெளியே வந்து விடும்படி தொடர்ந்து கூச்சலிடுகின்றனர். உடனடியாக உதவிக்கு பராமரிப்பு ஆட்களை அழைக்கின்றனர்.


இது குறித்து நேரு விலங்கியல் பூங்கா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “ சாய் குமார் என்ற இளைஞர் , தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் குதித்து, பாறையின் மேல் நடந்து சென்று சிங்கங்களை ஆத்திரப்படுத்தினார். அவரை உயிரியல் பூங்கா ஊழியர்கள் மீட்டு பகதூர்புரா காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளோம் ” எனத் தெரிவித்துள்ளது .

From around the web