நெகிழ்ச்சி வீடியோ... ஐசியூவில் அண்ணன்களுக்கு ராக்கி கயிறு கட்டி உயிரை விட்ட தங்கை!
இந்தியா முழுவதும் நேற்று ஆகஸ்ட் 19ம் தேதி திங்கட்கிழமை ரக்ஷாபந்தன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக இப்பண்டிகை வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத்தில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் டிப்ளமோ படித்து வந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அப்பெண்ணிற்கு ஒரு நபர் தொடர்ச்சியாக தொந்தரவு கொடுத்து வந்தார்.
మహబూబాబాద్ జిల్లా నర్సింహులపేట సోదరులకు రాఖీ కట్టి తుదిశ్వాస విడిచిన చెల్లి
— Telugu Scribe (@TeluguScribe) August 19, 2024
కోదాడలో డిప్లొమా చదువుతున్న యువతిని ప్రేమ పేరుతో ఆకతాయుల వేధింపులు తట్టుకోలేక గడ్డి మందు తాగి ఆత్మహత్యయత్నం చేసింది.
ఆసుపత్రిలో కొన ఊపిరితో ఉన్న తను రాఖీ పండగ నాటికి ప్రాణాలతో ఉంటానో లేదో అన్న బాధతో… https://t.co/rO3YBqqo8O pic.twitter.com/k5LMWuJHi4
இதனால் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளான அப்பெண் ஆகஸ்ட் 15 ம் தேதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவரை காப்பாற்றிய குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அப்பெண் ஆகஸ்ட் 17ம் தேதி உயிரிழந்தார். தனது உயிர் பிரியும் சில நிமிடங்களுக்கு முன்பு தனது 2 தம்பிகளுக்கு அப்பெண் ராக்கி கயிறு கட்டினார். இச்சம்பவம் மருத்துவமனையில் இருந்தவர்களுக்கு பெரும் நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

தற்கொலைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் தனிப்படை அமைக்கப்பட்டு அப்பெண்ணிற்கு தொல்லை கொடுத்தவர்களை தேடி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
