ரூ 3,50,000/- பணத்துடன் குட்காவை கடத்திய இளைஞர்!
த்துக்குடி மாவட்டத்தில் முத்தம்மாள் காலனி பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த மொபட்டில் வந்த இளைஞரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மொபட்டில் இருந்த 3 சாக்குப்பைகளை சோதனை செய்துள்ளனர்.

அதில், 40 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததும், அவற்றை அவர் கடத்தி சென்றதும் தெரியவந்தது. மேலும், ஒரு சாக்குப்பையில் ரூ.3½ லட்சம் பணமும் இருந்தது. அந்த பணத்தையும், புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர்.

அவர், முத்தம்மாள் காலனியில் வசித்து வருபவர் முருகையா மகன் 37 வயது வயனபெருமாள் என்பதும், அவற்றை வீட்டில் பதுக்கி வைத்திருந்த அவர், கடைகளில் விற்பதற்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவரையும், பறிமுதல் செய்த பணம், புகையிலை பொருட்களை சிப்காட் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
