பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரியிடம் பிக்பாக்கெட்!! ரயிலில் கொள்ளையடிக்கும் கும்பல் சுற்றி வளைப்பு!!

 
பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரியிடம் பிக்பாக்கெட்!! ரயிலில் கொள்ளையடிக்கும் கும்பல் சுற்றி வளைப்பு!!

பிரதமர் மோடியின் சிறப்புப் பாதுகாப்புக் குழுவில் (SPG) பணிபுரியும் பெண் அதிகாரி, மும்பை விலே பார்லே ரயில் நிலையத்தில் இருந்து பிரபாதேவி செல்லும் உள்ளூர் ரயிலில் இம்மாதம் 6 ம் தேதி ஏறியுள்ளார். ரயில், மாஹிம் ப்ளாட்பாரத்தை அடைந்த போது, அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக அவரது மொபைல் போனில் எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்தி வந்தது. தான் ரயிலில் பயணம் செய்யும் போது எப்படி பணமெடுக்க முடியும் என்கிற சந்தேகத்தில், தனது கைப்பையை சோதித்து பார்த்த போது , டெபிட் கார்டுடன் தனது பணப்பையையும் காணவில்லை. பின்னர் இது குறித்து அவர் அந்தேரி அரசு ரயில்வே போலீசாரிடம் (ஜிஆர்பி) புகார் பதிவு செய்தார்.

பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரியிடம் பிக்பாக்கெட்!! ரயிலில் கொள்ளையடிக்கும் கும்பல் சுற்றி வளைப்பு!!

போலீசாரின் தீவிர விசாரணையில், அவரது டெபிட் கார்டுகளைத் திருடியதாக ராணு வீரேந்திர பாண்டே மற்றும் ஹைதர் ஷேக் என இருவர் அடையாளம் காணப்பட்டனர். டெபிட் கார்ட் பயன்படுத்தி பணம் எடுத்த பின்னர், இந்த கும்பல் பிடிக்கப்பட்டது.

பெண் அதிகாரிடம் பணப்பையை திருடி சென்ற சில நிமிடங்களில் டெபிட் கார்டை ஷேக்கிடம் பாண்டே கொடுத்துள்ளார். பின்னர், அதை ஷேக் ஸ்வைப் செய்து, பணத்தைத் திரும்பப் பெற்று, ராணுவிடம் கொடுத்துள்ளார்.

பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரியிடம் பிக்பாக்கெட்!! ரயிலில் கொள்ளையடிக்கும் கும்பல் சுற்றி வளைப்பு!!

போலீசார் ஷேக்கை கைது செய்து விசாரித்த போது, அவர், பல்வேறு கொள்ளையர்கள் கொடுத்த 50 க்கும் மேற்பட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை ஸ்வைப் செய்து பணம் பறித்ததை ஒப்புக் கொண்டார். ரயில் பயணிகளின் பணப்பையை கொள்ளையடிக்கும் கும்பல் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஐபிசி மற்றும் ஐடி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்தேரி ஜிஆர்பி அதிகாரி தெரிவித்தார்.

From around the web