அதுக்கு இனி வாய்ப்பில்ல ராஜா!! தட்டி தூக்கிய ரோஜா!!

 
அதுக்கு இனி வாய்ப்பில்ல ராஜா!! தட்டி தூக்கிய ரோஜா!!

ஆந்திராவின் தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு. இவரை சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இனி முதல்வராக தான் சட்டசபைக்கு திரும்புவேன் என கண்ணீருடன் சபதம் செய்து சட்டசபையை விட்டு வெளியேறினார்.

இது குறித்து அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு குரல்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில் நடிகையும் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் விதி யாரையும் விட்டுவைக்காது. உங்கள் மாமனார் என்.டி.ஆரை 72-ம் வயதில் நீங்கள் கண்கலங்கச் செய்தீர்கள். இப்போது 71 வயதில் நீங்கள் கண்கலங்கி நிற்கிறீர்கள். விதி எல்லோருக்கும் நேரம் பார்த்து கணக்கை பைசல் செய்து விடும்.

உங்களுடைய மனைவியை குறித்து பலரும் பேசிவிட்டதாக குற்றச்சாட்டை எழுப்புகிறீர்கள். அன்று “நடிகை ரோஜா நீலப் படங்களில் நடிக்கிறார்” என்று கூறினீர்கள். எங்களுக்கு குடும்பம் இல்லையா? மானம் , ரோஷம் இல்லையா? இன்றைய முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் தாயார் விஜயா மற்றும் தங்கை ஷர்மிளாவை எப்படியெல்லாம் விமர்சனம் செய்தீர்கள்?

அதுக்கு இனி வாய்ப்பில்ல ராஜா!! தட்டி தூக்கிய ரோஜா!!

இப்போது நீங்கள் விடும் நீலிக்கண்ணீரை பார்த்து யாரும் ஆதங்கப்பட்ட மாட்டார்கள். எனக்கு தெரிந்து உங்கள் வாழ்நாளில் இனிமேல் சட்டசபைக்கு திரும்ப வாய்ப்பில்லை. பை.. பை… பாபு என்று நடிகை ரோஜா வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web