தேர்வு கிடையாது... நேரடிச் சேர்க்கை... பொதுத்துறை நிறுவனத்தில் 530 காலி பணியிடங்கள்:

 
BHEL பொதுத்துறை நிறுவனம் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் முன்னணிப் பொதுத்துறை நிறுவனமான திருச்சி பாரத் மிகுமின் நிறுவனத்தில் ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்காக 530 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 530 பணியிடங்கள். சம்பந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ, டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

bhel

இப்பணிகளுக்கு எழுத்துத் தேர்வு எதுவுமில்லை. விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவர். 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும் (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு).

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் BHEL திருச்சி கிளை அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதி: செப்டம்பர் 12. கூடுதல் விவரங்களுக்கு: trichy.bhel.com என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடலாம்.