“விஜய், த்ரிஷா பற்றி பேசியதில் தப்பில்லை; வருத்தமும் இல்லை!” - சமுத்திரக்கனி விளக்கம்!

 
சமுத்திரக்கனி த்ரிஷா விஜய் சமுத்திரக்கனி த்ரிஷா விஜய்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து தான் பேசிய விமர்சனங்கள் தொடர்பாக, நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி தற்போது வெளிப்படையான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். தான் பேசியது ஒரு 'வலி' என்றும், அதற்கு வருத்தப்படப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் குடும்பத் திருமண விழாவிற்கு நடிகர் விஜய்யும், நடிகை த்ரிஷாவும் இணைந்து வந்தது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளானது. இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'டெக்ஸ்லா' திரைப்படத்தின் பூமி பூஜையில் கலந்துகொண்ட சமுத்திரக்கனி, விஜய்யின் இந்தச் செய்கையைக் கடுமையாக விமர்சித்திருந்தார். "எதுவா இருந்தாலும் நான்கு சுவற்றுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியதுதானே? யாரைப் பழிவாங்குற? கட்சிக்காரனே இனி நம்மால் முடியாது என்கிறான்" என அவர் ஆவேசமாகப் பேசிய வீடியோ வைரலானது.


தனது பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சமுத்திரக்கனி, தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்: "எனக்கு மனதில் ஒன்று வைத்துக்கொண்டு வெளியே ஒன்று பேசத் தெரியாது. அந்த வீடியோவில் நான் பேசியது ஒரு அக்கறை, ஒரு வலி. என் மனதில் பட்டதைத்தான் நான் பேசினேன். அப்படிப் பேசியதற்காக நான் வருத்தப்படவும் இல்லை, அது ஒரு குற்றமாகவும் எனக்குத் தெரியவில்லை. வீடியோ எடுக்கும் போதே எனக்குத் தெரியும், அங்கு ஒரு தம்பி வீடியோ எடுக்கிறான் என்று. அந்த வீடியோவுக்கு 'மானே தேனே' போட்டு தம்பிகள் வேற வேலையைப் பார்த்துட்டாங்க. அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை."

சமுத்திரக்கனி த்ரிஷா விஜய்

சமுத்திரக்கனியின் இந்த விளக்கம் விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், சமுத்திரக்கனி சொல்வது நியாயமான ஆதங்கம் தான் என ஒரு தரப்பினர் அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 'தமிழக வெற்றிக் கழகம்' அரசியல் களத்தில் தடம் பதிக்கத் தயாராகி வரும் நிலையில், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த இத்தகைய பொது விமர்சனங்கள் அரசியல் ரீதியாகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.