’சாப்பிட கூட வழியில்லை’.. ராமநாதபுரத்தில் அகதிகளாக நுழைந்த இலங்கை தமிழர்கள்!

 
இலங்கைத் தமிழர்கள்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், தனுஷ்கோடி கடல் வழியாக கடந்த 2022-ம் ஆண்டு முதல் இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில், மன்னார் மாவட்டம் திருக்கேதீஸ்வரம் பகுதியை சேர்ந்த முருகானந்தம், அவரது மனைவி ரீட்டா மேரி மற்றும் இரு குழந்தைகளுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இலங்கையில் இருந்து படகு மூலம் இன்று காலை தனுஷ்கோடி ஒன்றாம் மணல் திட்டில் இறங்கினர்.

தகவலறிந்து மணற்கரையில் நின்றிருந்த இலங்கை தமிழர்கள் 4 பேரையும் மண்டபம் இந்திய கடலோர காவல்படை ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பல் மூலம் மீட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு கொண்டு சென்று ராமேஸ்வரம் மரைன் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அவர்களை மண்டபம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாராணைக்குப் பின் நான்கு பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், ""இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், தினமும் சாப்பிட முடியாமல் தவிப்பதாகவும், இலங்கையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதால்,  குழந்தைகள் பாதுகாப்பாக வாழ வழியில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தான் அகதிகளாக தமிழகம் வந்தோம் என தெரிவித்தனர்.இதை தொடர்ந்து இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்த அகதிகளின் எண்ணிக்கை 297 ஆக உயர்ந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web