வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

 
வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

இன்று மத்திய வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும்.

வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

இதன் காரணமாக தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web