கோவிலில் பரவசத்துடன் அனுமனை 5 முறை வணங்கி விட்டு உண்டியலை உடைத்த திருடன்!
Apr 29, 2025, 20:40 IST

மத்திய பிரதேச மாநிலத்தில் ஜபல்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அனுமன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த திங்கட்கிழமை இரவு நேரத்தில் திருடன் ஒருவன் கோவிலுக்குள் நுழைந்தான். அப்போது திருடுவதற்கு முன் அனுமன் சிலையை 5 முறை வணங்குகிறார்.
அதன் பிறகு தானே கதவை உடைத்து உள்ளே சென்று உண்டியலில் இருந்த பணத்தை திருடுகிறார். வெளியே வந்த அவர் மீண்டும் 5 முறை வணங்கி விட்டு அங்கிருந்து சென்றார். இந்நிலையில் மறுநாள் காலை கோவில் பூசாரி உண்டியலில் இருந்த பணம் காணாமல் போனதை அறிந்து புகார் அளித்தார்.
அந்த புகாரின் படி காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து , திருடனை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
From
around the
web