திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்!

 
திருவண்ணாமலை

 இன்று ஆகஸ்ட் 19ம் தேதி திங்கட்கிழமை உலகம் முழுவதும் ஆன்மிக அன்பர்களால் ஆவணி பௌர்ணமி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பௌர்ணமி நாட்களில் உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு  ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து  கிரிவலம் செல்வது வழக்கம். அந்த வகையில் ஆவணி மாத பௌர்ணமியான இன்று மலையை சுற்றியுள்ள 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.  

திருவண்ணாமலை
இதனை முன்னிட்டு கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று 19ம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 2:58 மணிக்கு தொடங்கி மறுநாள் 20ம் தேதி அதிகாலை 1.02 மணி வரை நல்ல நேரம் இருக்கிறது. மேலும் இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

 பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!