திருவண்ணாமலை: சினிமாவை மிஞ்சும் திட்டம்.. அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் பல லட்சம் கொள்ளை !!

 
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் 10ஆவது தெருவில் ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. அந்த மையத்திற்குள் நள்ளிரவு புகுந்த கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் மெஷின் மூலம், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்து ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதேபோல் தண்டராம்பட்டு சாலையில் உள்ள ஏடிஎம் ஒன்றில் அதே கொள்ளை கும்பல் புகுந்து கேஸ் வெல்டிங் மெஷின் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் இருந்த ரூ.33 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மேலும், கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இருந்த ஏடிஎம் மையத்தில் இருந்த லட்சக்கணக்கான ரூபாயை திருடி சென்றுள்ளனர். இதேபோல் போளூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஏடிஎம் மையத்திலும் மர்ம நபர்கள் புகுந்து கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்ஐ உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

திருவண்ணாமலை

ஒரே நேரத்தில் நான்கு ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்ஐ உடைத்து ஒரே மாதிரியாக ஒரே கொள்ளை கும்பல் கொள்ளையடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் ஏடிஎம் மையத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை கொள்ளை கும்பல் தீவைத்து எரித்துவிட்டு தப்பிசென்றனர். இதனால் திருடர்களை கண்டுபிடிப்பதில் காவல்துறைக்கு சவால நிலவி வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொள்ளை சம்பவத்தில் சுமார் 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை

ஏடிஎம் செயல்பாடுகள் குறித்து நன்கு தெரிந்தவர்கள் தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும்  என கூறுகின்றனர். மேலும் ஆந்திரா, கர்நாடகா மாநில போலீசாருடன் இணைந்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
 

From around the web